News October 31, 2025
BREAKING நெல்லை: மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்

நரசிங்கநல்லூர் பகுதியில் குடும்பத்தகராறில் இன்று மாமியார் வள்ளியம்மாளை(45) மருமகன் வெட்டி படுகொலை செய்துள்ளார். மோதல் சம்பவத்தை தடுக்கச் சென்ற வள்ளியம்மாளின் மகள் துர்காவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தாய், மகள் இருவரையும் வெட்டிய துர்காவின் கணவர் ஆறுமுக நயனாரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 1, 2025
நெல்லை: ரயில்வேயில் 2569 பணியிடங்கள்! APPLY NOW

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் <
News November 1, 2025
நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

அம்பாசமுத்திரம் புறவழிச் சாலையை இன்று பகல் 10:30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார். பிசான பருவ சாகுபடிக்காக இன்று பகல் 11 மணிக்கு பாவநாசம் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.
மணிமுத்தாறு தூங்கப் போதையில் சுற்றுச்சூழல் மற்றும் சாகச சுற்றுலா அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை நிகழ்வு இன்று பகல் 12 மணிக்கு நடக்கிறது.
News November 1, 2025
நெல்லை: பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்தவர் முத்தரசி 43. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் கணவர் பாலகணேஷ் கடந்தாண்டு இறந்தார். மகள்களுடன் முத்தரசி ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். சில நாட்களாக முத்தரசி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சாந்தி கடைக்கு சென்ற நேரத்தில் முத்தரசி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


