News October 31, 2025
புதுச்சேரி: மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து

புதுச்சேரி, காவல்துறை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்தந்த காவல் நிலையங்களில், மக்கள் குறை தீர்வு நாள் முகாம் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, காவல் நிலையங்களில் நடைபெற இருந்த மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
புதுவை: ரூ.2.44 கோடி மோசடி – ஒருவர் கைது

புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தொழிலதிபரான இவர், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவைகளை வாங்கி, கம்பெனிக்கு விற்பனை செய்து வருகிறார். இவரிடம் மக்காச்சோளம் வாங்கித் தருவதாக ரூ.2.44 கோடி மோசடி செய்த ப்ரோக்கர் செல்வம் என்பவ்ரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதற்கு காரணமாக இருந்த புதுவைச் சேர்ந்த தம்பதியை தேடி வருகின்றனர்.
News November 1, 2025
புதுவை: போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுவை, சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். பேண்ட் மாஸ்டரான இவர், கடந்த 2023ம் ஆண்டு வீடு புகுந்து தனிமையில் இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புதுவை விரைவு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், நேற்று நீதிபதி சுமதி ரமேஷுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News November 1, 2025
புதுச்சேரி: வாழ்த்து தெரிவித்த கவர்னர்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி விடுதலைத் திருநாளை ஒட்டி, மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீர்ர்களின் தியாகங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


