News October 31, 2025

நாளை விளக்கம் அளிக்கிறேன்: செங்கோட்டையன்

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்க இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், அண்மை காலமாகவே இபிஎஸ் உடன் மோதல்போக்கை கடைபிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 1, 2025

வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ₹2.5 கோடி ஷேர்

image

‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்ததாம் கல்யாணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ற சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. தாத்தா இறந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பேரனுக்கு ₹2.5 கோடிக்கான பங்கு சான்றிதழ்கள் கிடைத்தது. தாத்தா உயிலில் சொத்துகளை பேரன் பெயரில் எழுதி வைத்தாலும், தனக்கும் பங்கு வேண்டும் என தாத்தாவின் மகன் கோருகிறார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், இருவரும் கோர்ட்டை நாடியுள்ளனர்.

News November 1, 2025

ஏன் அர்ஷ்தீப் சிங் இல்லை.. விளாசிய அஸ்வின்

image

Experiment செய்ய வேண்டும் என்றால், பும்ராவை நீக்கிவிட்டு அணியில் அர்ஷ்தீப் சிங்கை சேர்க்கலாமே என அஸ்வின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பும்ரா விளையாடினாலும், பிளேயிங் XI-ல் அர்ஷ்தீப் இருக்க வேண்டும் என தெரிவித்த அஸ்வின், T20-யில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்பது புரியவில்லை எனவும் கூறினார். அர்ஷ்தீப் சிங் அடுத்த மேட்ச்சில் விளையாடணுமா?

News November 1, 2025

3,740 கோயில்களில் கும்பாபிஷேகம்: சேகர்பாபு

image

திராவிட மாடல் ஆட்சியில், இதுவரை 3,740 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர்களை ஓட வைத்த பெருமையும் திமுக அரசுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!