News October 31, 2025
தென்காசி: 22 நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது

செங்கோட்டை, கடையம், தென்காசி கடையநல்லூர் வட்டாரங்களில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள இடங்களில் விவசாயிகள் பயன்பெற வேண்டி 22 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஒப்புதல் பெறப்பட்டு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக இன்று நடந்த விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 1, 2025
தென்காசி: கோவில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

தென்காசி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
News November 1, 2025
சங்கரன்கோவில் அருகே பென் தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. இவருடைய மனைவி சமுத்திரக்கனி (57). இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சமுத்திரக்கனி உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News November 1, 2025
தென்காசியில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தாயுமாணவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுதார்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இல்லம் தேடி வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற நவ. 3, 4ம் தேதிகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பன்னுங்க.


