News October 31, 2025
நெல்லை: நவம்பர் மாதம் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் படி நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 65 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரருக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறத. நவம்பர் மாதத்திற்கான இந்த சிறப்பு நிகழ்ச்சி வருகிற 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும். இதை தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
நெல்லையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தாயுமாணவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுதார்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இல்லம் தேடி வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற நவ. 3, 4ம் தேதிகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பன்னுங்க.
News November 1, 2025
போலி வங்கி கணக்கு மோசடி; இளைஞர் கைது – நெல்லை எஸ்.பி

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரில் ஆன்லைனில் முதலீடு செய்து போலியான வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்த ஆசையை தூண்டி மோசடி செய்து ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம், கிட்டங்காயத்தை சேர்ந்த 27 வயதான ராசித் என்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது.
News October 31, 2025
திருநெல்வேலி முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பயிற்சி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு விரைவில் களப்பணி தொடங்கும்.


