News October 31, 2025
கள்ளக்குறிச்சி: இழந்த செல்வதை மீட்டு தரும் பெருமாள்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் தாலுக்காவிலுள்ள திருவரங்கத்தில் அமைந்துள்ளது ஆதி திருவரங்கம் கோயில். இந்த கோயில் 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் ரங்கநாத சாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும், இங்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தால் திருமணம் வரம், குழந்தை வரம் மற்றும் இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம்.ஷேர் பண்ணுங்க
Similar News
News November 1, 2025
கள்ளக்குறிச்சி:வடமாநிலத்தவர் கைவரிசை!

கிளியூரைச் சேர்ந்த ஸ்ரீதர் அக்.30-ம் தேதி புகைப்பட்டியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்று மீண்டும் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை என அளித்த புகார் அளித்தனர். அதன் ,அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த நாகேஷ் மிஸ்ரா பைக்கை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் அக்டோபர் 31-ம் தேதி அவரை கைது செய்த போலீசார் 2 பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
News November 1, 2025
17 துணை வட்டாட்சியர்கள் அதிரடி பணியிடை மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மற்றும் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அக்டோபர் 31-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருக்கோவிலூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக கங்காலட்சுமி என்பவரும், வாணாபுரம் தேர்தல் துணை வட்டாட்சியராக சதீஷ்குமார் என 17 துணை வட்டாட்சியர்கள் பணியிடை மற்றும் செய்யப்பட்டுள்ளனர்.
News November 1, 2025
கள்ளக்குறிச்சி: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (அக்.31) மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தில் கடப்பா கற்களை ஏற்றிச் சென்ற நபரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


