News October 31, 2025
17 லட்சம் உயிர்களை காவு வாங்கிய காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசு பலி குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 17.2 லட்சம் பேர் காற்று மாசுபாடு காரணமாக பலியாகியுள்ளதாக, The Lancet Countdown on Health and Climate Change அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு, 2010-ம் ஆண்டிலிருந்து 38% அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 1, 2025
தினம் 2 முட்டை சாப்பிட்டால்…

*உணவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது முட்டை தான். வைட்டமின்கள் B5, B2, B12, B6, K, E, மற்றும் D, கால்சியம், துத்தநாகம், செலினியம், ஃபோலேட், பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய நுண்சத்துகள் உள்ளன. *முட்டை நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. *புரதமும், பிற சத்துகளும் நிறைந்திருந்தாலும் குறைவான கலோரி கொண்டது. *உடனடி ஆற்றலை கொடுக்கும். இதிலுள்ள லூட்டின், வைட்டமின் A சத்துகள் பார்வை திறனை அதிகரிக்கும்.
News November 1, 2025
LSG ஹெட் கோச் ஆகிறாரா யுவராஜ் சிங்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், IPL 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு DC, GT ஆகிய அணிகளுடனும் யுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் பிளேயராகவும் யுவராஜ் விளையாடியுள்ளார்.
News November 1, 2025
பிளாஸ்டிக் பாட்டில்களை தவிருங்கள்: சித்தராமையா

பிளாஸ்டிக் பாட்டில்களை அரசு அலுவலகங்கள் & நிகழ்ச்சிகளில் தவிர்ப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக CM சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக சுற்றுச்சூழலை காக்கும் பொருள்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். ‘Nandini Products’ என்ற உள்மாநில உற்பத்தி பொருள்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்திலும் மீண்டும் மஞ்சள் பை, அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


