News October 31, 2025
கரூரில் CBI அதிகாரிகள் தீவிர விசாரணை

கரூர் சம்பவத்தை CBI அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதனிடையே, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற CBI அதிகாரிகள், தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலுச்சாமிபுரத்தில் உள்ள டீக்கடையில் விசாரணை செய்த அவர்கள், CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். விஜய் பேசிய இடத்தின் அமைப்பு, பரப்பு போன்றவற்றை நவீன கருவிகளுடன் முப்பரிமாண கோணத்தில் பதிவு செய்த அதிகாரிகள், அங்குள்ள மக்களிடமும் விசாரணை நடத்தினர்.
Similar News
News November 1, 2025
LSG ஹெட் கோச் ஆகிறாரா யுவராஜ் சிங்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், IPL 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு DC, GT ஆகிய அணிகளுடனும் யுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் பிளேயராகவும் யுவராஜ் விளையாடியுள்ளார்.
News November 1, 2025
பிளாஸ்டிக் பாட்டில்களை தவிருங்கள்: சித்தராமையா

பிளாஸ்டிக் பாட்டில்களை அரசு அலுவலகங்கள் & நிகழ்ச்சிகளில் தவிர்ப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக CM சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக சுற்றுச்சூழலை காக்கும் பொருள்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். ‘Nandini Products’ என்ற உள்மாநில உற்பத்தி பொருள்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்திலும் மீண்டும் மஞ்சள் பை, அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
சாதி அவமானகரமானது: மாரி செல்வராஜ்

சாதி என்பது பெருமை அல்ல, அது அவமானகரமானது என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், மாரியின் படங்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை உருவாக்கும் வண்ணம் உள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி பேசியுள்ள அவர், போஸ்டர் ஒட்டி சாதிப் பெருமை பேசலாம், ஆனால் நான் சாதிக்கு எதிராக பேசக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


