News October 31, 2025

மகனை குடும்பத்துடன் கொன்ற தந்தைக்கு தூக்கு!

image

கேரள மாநிலம் இடுக்கியில், கொலை வழக்கில் 82 வயது முதியவரான ஹமீத்துக்கு மரண தண்டனை விதித்து தொடுபுழா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் ஹமீத் சொத்து தகராறில், உறங்கி கொண்டிருந்த தனது மகன், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளை எரித்து கொலை செய்தார். வழக்கு விசாரணையின் போது, இந்த கொலை அரிதிலும் அரிதானது என்ற பிரிவுக்குள் வருவதாக கூறி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

Similar News

News November 1, 2025

SIR என்றாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்

image

‘SIR’ என்றாலே திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிடுகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அந்த SIR-ஐ இதுவரை CM ஸ்டாலின் கண்டுபிடிக்கவில்லை என்றும் சாடினார். 2016 – RK நகர் இடைத்தேர்தலின்போது, போலி வாக்காளர்கள் உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் திமுகவினர் என்று சுட்டிக்காட்டிய நயினார், இன்று SIR-ஐ அவர்களே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

News November 1, 2025

தோனி தொடர்ந்த வழக்கு: Ex IPS மனு மீண்டும் தள்ளுபடி

image

IPL சூதாட்டம் பற்றி விசாரித்த Ex IPS அதிகாரி சம்பத் குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக TV நிகழ்ச்சியில் கூறினார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ₹100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சென்னை HC-ல் தோனி வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க கோரி IPS அதிகாரி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News November 1, 2025

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம்: கர்னல்

image

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம் என்று கர்னல் ஷோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அவர், இவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். Gen Z தலைமுறை குறித்த கர்னலின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!