News October 31, 2025

நயினாருடன் அதிமுகவினர் ஆலோசனை

image

நெல்லை BJP ஆபீஸில் நயினாருடன் அதிமுக ex அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து பேட்டியளித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், அந்த மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒருநாள் பரபரப்புக்காக 3 பேரும் சந்தித்துள்ளனர் என்று விமர்சித்தார்.

Similar News

News November 1, 2025

SIR என்றாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்

image

‘SIR’ என்றாலே திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிடுகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அந்த SIR-ஐ இதுவரை CM ஸ்டாலின் கண்டுபிடிக்கவில்லை என்றும் சாடினார். 2016 – RK நகர் இடைத்தேர்தலின்போது, போலி வாக்காளர்கள் உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் திமுகவினர் என்று சுட்டிக்காட்டிய நயினார், இன்று SIR-ஐ அவர்களே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

News November 1, 2025

தோனி தொடர்ந்த வழக்கு: Ex IPS மனு மீண்டும் தள்ளுபடி

image

IPL சூதாட்டம் பற்றி விசாரித்த Ex IPS அதிகாரி சம்பத் குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக TV நிகழ்ச்சியில் கூறினார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ₹100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சென்னை HC-ல் தோனி வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க கோரி IPS அதிகாரி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News November 1, 2025

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம்: கர்னல்

image

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம் என்று கர்னல் ஷோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அவர், இவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். Gen Z தலைமுறை குறித்த கர்னலின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!