News October 31, 2025

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்…பரபரப்பு!

image

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் இன்று மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் நாய், மாடு, பன்றி, கொசு வலை போன்ற பொம்மைகளோடு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Similar News

News November 1, 2025

மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்ட் நிறுவனம்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் உள்ள போர்டு தொழிற்சாலையில் மீண்டும் கார் எஞ்சின்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (அக்டோபர் 31) தலைமை செயலகத்தில் கையெழுத்தானது. ரூபாய் 3,250 கோடி மதிப்பீட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் இந்த நிறுவனத்தால் 1,000-திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.1) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை (நவ. 1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க*

News October 31, 2025

செங்கல்பட்டு காவல் துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

செங்கல்பட்டு காவல் துறை இன்று (அக்.31) வாகன ஓட்டிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓரத்தில் நிறுத்த வேண்டாம், மேலும் இரவு நேரங்களில் வண்டிகளை பார்க் செய்யும் போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இது முக்கியமான எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!