News October 31, 2025

விழுப்புரம்: 48 மணி நேரத்தில் இழந்த பணத்தை மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் வாங்குவது, Part Time Job எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். எனவே, விழுப்புரத்தில் உள்ள மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) இந்த<> லிங்க்<<>> மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை மீட்கலாம். ஷேர்!

Similar News

News November 1, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அக்.31 இரவு முதல் நவ.1 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

விழுப்புரம் – சென்னை மெமு ரயில் சேவை மாற்றம்

image

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் யார்டில் பணிகள் நடக்க உள்ளதால் தாம்பரம் – விழுப்புரத்திற்கு நவ.1, 2 ஆகிய தேதிகளில் காலை 9:45 மணிக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் திண்டிவனம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம் – சென்னை கடற்கரைக்கு நவ-1, 2 ஆகிய தேதிகளில் மதியம் 1:40 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் விழுப்புரம்- திண்டிவனம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 31, 2025

விழுப்புரம்: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

image

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து 15.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!