News October 31, 2025
சேலத்தில்: தந்தை 2ம் திருமணம் மகன் தற்கொலை!

சேலம், அய்யந்திருமாளிகையைச் சேர்ந்த மணிகண்டன் (21), நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.20 ஆண்டுகளுக்கு முன் இவரது தாய் சுசீலா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வந்த தந்தை முத்துமணி, இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் மணிகண்டன் மனவேதனை அடைந்தது தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் குற்ற செயல்களை தடுத்திடவும், இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களைக் காத்திடவும், காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக். 31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
சேலம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News October 31, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் (31.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


