News October 31, 2025
கோவையில் கொடுமை: தாய் மகள்களுக்கு அரிவாள் வெட்டு

கோவை துடியலூர் சாஸ்திரி விதியை சேர்ந்த செல்வி என்பவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர்.கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து கார்த்திக் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் மது போதையில் நேற்று வீட்டில் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் செல்வி மற்றும் மகள்களை வெட்டியுள்ளார். துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்
Similar News
News October 31, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (31.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க அழைப்பு!

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவை மாநகர குற்ற பிரிவில் ‘செட் இ பேமெண்ட்’ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரமாக உள்ள ஆவணங்களுடன் கோவை மாநகர குற்றப்பிரிவு-1ல் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.01) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, சுங்கம் பைப்பாஸ், ஸ்டேட் பேங்க் ரோடு, ஆட்சியர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


