News October 31, 2025
ராணிப்பேட்டை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்-31) இரவு 10 மணி முதல் இன்று (நவ.1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
ராணிப்பேட்டை: போதை மாத்திரைகள் பதுக்கிய 2 பேர் கைது

வாலாஜா பகுதியில் தருண் என்பவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு இன்று (அக்.31) தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ற காவலர் சாலமன், அவர்களிடம் இருந்து 800 போதை மாத்திரைகளை கைப்பற்றினார். மேலும், இந்த மாத்திரைகள் புனேவில் இருந்து கொரியர் மூலம் வரவைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News October 31, 2025
ராணிப்பேட்டை: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <


