News October 31, 2025
மயிலாடுதுறை: மெசேஜில் வரும் ஆபத்து எச்சரிக்கை

செல்போன் டவர் அமைக்க இடம் தேவை என்று தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டவர் அமைக்க காலியிடம் தேவை முன்பணம், வாடகை வழங்கப்படும் என வரும் குறுஞ்செய்திகளை க்ளிக் செய்தால் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 1, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
News October 31, 2025
பொறுப்பு அமைச்சரை வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மெய்யநாதன் வருகை தந்தார். அவரை குத்தாலம் முன்னாள் திமுக எம்எல்ஏவும் திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளருமான குத்தாலம் அன்பழகன் நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது குத்தாலம் பேரூர் செயலாளர் சம்சுதீன் உள்ளார்.
News October 31, 2025
மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


