News October 31, 2025
தஞ்சை: அரசு ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி அடுத்த விண்ணனூர்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த நிதிஷ் (22) என்பவர் தனது நண்பர்களுடன் காயத்திற்கு சிகிச்சை அளிக்க நேற்று திருக்காட்டுப்பள்ளி GHக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் நவீன், சூர்யா அகியோரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
1040 பரத கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மேயர்

தஞ்சாவூர் பெத்த அண்ணன் கலையரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1040 சதய விழாவை முன்னிட்டு இன்று (அக்.31) வெள்ளிக்கிழமை 1040 பரத கலைஞர்களின் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பரத கலைஞர்களை மேயர் சண். இராமநாதன் அவர்கள் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
News October 31, 2025
தஞ்சை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


