News October 31, 2025

எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்

image

தூய்மை இந்தியா முன்னெடுப்பு இருந்தாலும், நாடு தூய்மையான பாடில்லை. குப்பை தொட்டியை தவிர அனைத்து இடங்களிலும் கிடக்கும் குப்பைகள், நீர் நிலைகளில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் என மோசமாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இதற்காக வாரணாசி மாநகராட்சி கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரோட்டில் எச்சில் துப்பினால், குப்பை போட்டால் ₹200 அபராதம் என அறிவித்துள்ளது. இங்கும் இது அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும்?

Similar News

News November 1, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News November 1, 2025

PM-ன் பேச்சை பொருட்படுத்த கூடாது: எஸ்.வி.சேகர்

image

TN-ல் பிஹார் தொழிலாளர்களை துன்புறுத்துவதாக PM பேசியதற்கு எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் சிறந்த மாநிலமாக இருந்தால் அங்கிருப்பவர்கள் ஏன் தமிழகத்திற்கு வர வேண்டும் என்றும் தமிழர்களுக்கு அங்கு வேலை கொடுக்கலாமே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் BJP வெற்றி பெறும் எண்ணத்தில், அங்குள்ளவர்களை உசுப்பேற்றும் விதமாக PM மோடி பேசுவதை, பொருட்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

News November 1, 2025

உங்களுக்கு இந்த ஃபோபியா இருக்கா?

image

ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே ஃபோபியா என்று கூறுகின்றனர். பயம் பொதுவாக அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் அதை உணருபவர்களுக்கு அது உண்மையானது. மக்களிடையே பொதுவாக காணப்படும் அச்சங்கள் மற்றும் அதற்கு என்ன ஃபோபியா என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு என்ன பயம் இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!