News October 31, 2025
நாகை: மாணவியிடம் அத்துமீறிய போலீஸ் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், ஆழியூரைச் சேர்ந்த காவலர் குணா (37), 12-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 31, 2025
நாகை: விவசாயிகள் வங்கி கணக்கில் 218 கோடி!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் குருவை நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை, 19,142 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 218 கோடியே 79 இலட்சத்து 7 ஆயிரத்து 89 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
நாகை: ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 31, 2025
கீழ்வேளூர்: இரவு காவலர் பணிக்கு நேர்காணல்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடத்திற்கு இணைய வழியாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வழங்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு வரும் நவ.3-ம் அன்று காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என ஒன்றிய ஆணையர் ரேவதி தெரிவித்துள்ளார்.


