News October 31, 2025
ராணிப்பேட்டை வரும் துணை முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் சிப்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்துகொண்டு, வருகிற 3ம் தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News October 31, 2025
ராணிப்பேட்டை: போதை மாத்திரைகள் பதுக்கிய 2 பேர் கைது

வாலாஜா பகுதியில் தருண் என்பவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு இன்று (அக்.31) தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ற காவலர் சாலமன், அவர்களிடம் இருந்து 800 போதை மாத்திரைகளை கைப்பற்றினார். மேலும், இந்த மாத்திரைகள் புனேவில் இருந்து கொரியர் மூலம் வரவைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News October 31, 2025
ராணிப்பேட்டை: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <
News October 31, 2025
ராணிப்பேட்டை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


