News October 31, 2025
அன்புமணி மீது பாய்கிறதா வழக்கு?

நேபாளத்தில் ஊழல் ஆட்சியை அகற்ற GEN Z தலைமுறையினர் செய்த புரட்சியை போல, தமிழகத்திலும் இளைஞர்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். முன்னதாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து நேபாளத்தில் நடந்த புரட்சி தமிழகத்திலும் நடக்கவேண்டும் என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தார். இதற்காக, வன்முறையை தூண்டுகிறார் என அவர் மீது வழக்கு பாய்ந்தது. இந்நிலையில், அன்புமணி மீதும் வழக்கு பாயுமா?
Similar News
News November 1, 2025
ராசி பலன்கள் (01.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 1, 2025
முடிவுக்கு வந்தது ஷிவம் துபேவின் அதிர்ஷ்டம்..!

இந்திய T20 அணியின் மிகவும் ராசிக்காரராக பார்க்கப்பட்டவர் ஷிவம் துபே. அவர் அணியில் இருந்த கடந்த 37 போட்டிகளில் இந்திய அணி தோல்வியே அடைந்ததில்லை என்பதே அதற்கு காரணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், அவரது அதிர்ஷ்டம் இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக நெட்டிசன்கள் SM-ல் பதிவிட்டு வருகின்றனர். அடுத்த போட்டியில் இந்தியா வென்று, இந்த கணக்கை முதலில் இருந்து தொடங்குமா?
News November 1, 2025
செங்கோட்டையன் நீக்கம்.. EPS-ஐ கண்டித்த சசிகலா

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கிய EPS-ற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது என்றும் இதுபோன்ற மனப்பாங்கு திருத்திக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுக ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை திமுகவுக்கு மறைமுக உதவி செய்பவர்களாகவே கருதமுடியும் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.


