News October 31, 2025
திருச்சி மாவட்டம் சாதனை!

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறையினர், கல்லுாரிக்கனவு உள்ளிட்ட திட்டங்கள் மூலமான எடுத்த தொடர் நடவடிக்கைகளால், திருச்சி மாவட்டத்தில் 2024–25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த 11,064 அரசு பள்ளி மாணவர்களில், 10,864 பேர் (98 சதவீதம்) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம், திருச்சி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
திருச்சி: லஞ்ச வழக்கில் விஏஓ-க்கு 3 ஆண்டு சிறை

மணப்பாறை தாலுக்கா நடுப்பட்டியைச் சேர்ந்த தேக்கமலை என்பவர் ஆடு மாடு வாங்குவதற்கு வங்கியில் லோன் எடுக்க கிராம நிர்வாக அலுவலர் ராமரத்தினத்தை கடந்த 2008ல் சந்தித்துள்ளார். அப்போது விஏஓ ராமரத்தினம் பட்டா சிட்டா அடங்கல் வழங்க ரூ.1500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் இன்று ராமரத்தினத்திற்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருச்சி ஊழல் தடுப்பு நீதிபதி புவியரசு தீர்ப்பு அளித்துள்ளார்.
News October 31, 2025
திருச்சி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 31, 2025
திருச்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர், பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை அளித்து இன்று (அக்.31) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


