News October 31, 2025
BREAKING: நள்ளிரவில் விஜய்க்கு வந்த அதிர்ச்சி

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புஸ்ஸி N.ஆனந்துக்கு தகவல் கிடைத்ததும், பதறியடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்தார். ஆனால், அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார். விஜய்க்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
திறனாய்வு தேர்வு: செவ்வாய்க்கிழமையே கடைசி!

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் செவ்வாய்கிழமை(நவ.4) கடைசி நாளாகும்.
News October 31, 2025
வறுமையை ஒழித்த மாநிலமாகும் கேரளா

தீவிர வறுமையை (Extreme Poverty) மாநிலத்தில் இருந்து ஒழித்துவிட்டதாக கேரள அரசு, நாளை (நவ.1)அறிவிக்க உள்ளது. உலக வங்கியின் வரையறைப்படி, ஒருவரின் தினசரி வருமானம் ₹168-க்கு குறைவாக இருந்தால், அவர் தீவிர வறுமையில் இருப்பதாக கொள்ளப்படும். இந்நிலையில் உணவு, உறைவிடம், உடைகள், சுகாதார வசதி, குறைந்தபட்ச வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர வறுமையை அடையாளம் கண்டு ஒழித்ததாக கேரளா கூறுகிறது.
News October 31, 2025
நீண்ட ஆயுளுக்கு உதவும் இரவு குளியல்

காலை குளியல் போன்றே, இரவு குளியலும் வெறுமென உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது. தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு குளிப்பது மிகவும் சிறந்தது. மோசமான தூக்கம் இதய நோய், மனச்சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி ஆயுட்காலத்தை குறைக்கிறது. ஆனால், இரவு குளியல் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுத்து, நீண்ட காலம் வாழ உதவுகிறது. மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.


