News October 31, 2025

கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2 மணியளவில் வயலுக்கு சென்ற முதியவர் அருகில் உள்ள நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 31, 2025

கடலூரில் 2 உதவி ஆய்வாளர்கள் ஓய்வு

image

கடலூர் மாவட்டம், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள் நமச்சிவாயம், பழனி ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.

News October 31, 2025

கடலூர்: ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 31, 2025

உதவித்தொகை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற <>tamilvalarchithurai.org<<>> என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பெற்று வரும் நவ.17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!