News April 18, 2024

கோவை: மாயமான 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர்

image

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி விட்டனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. சகோதரரை மீட்டு தரக்கோரி விவசாயி திருமலை என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் காவல்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை ஜூன் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

கோவை அருகே சோக சம்பவம்!

image

கோவை இடையா்பாளையம் டிவிஎஸ் நகரை சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் ரியா(5). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்த நிலையில் காய்ச்சலால் சில நாள்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில் நேற்று முந்தினம் குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வராததால் பெற்றோர் சென்று பார்த்த போது, தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 7, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.08) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எம்ஜி சாலை, ஒண்டிப்புதூர், துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், மன்னம்பாளையம், வலசுபாளையம் அய்யப்பநாயக்கன்பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 7, 2025

கோவை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
8.மின்சாரத்துறை – 1912
9.சாலை விபத்து அவசர சேவை – 1073
10.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!