News October 31, 2025

திருச்சி: மகளை சீரழித்த கொடூர தந்தை கைது

image

துவாக்குடியைச் சேர்ந்தவர் விஸ்வா (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில மாதங்களளாக மனைவியை பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் தனது 12 வயது மகளை இவர் மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் பேரில் விஸ்வாவை போக்சோவின் கீழ் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 31, 2025

திருச்சி: லஞ்ச வழக்கில் விஏஓ-க்கு 3 ஆண்டு சிறை

image

மணப்பாறை தாலுக்கா நடுப்பட்டியைச் சேர்ந்த தேக்கமலை என்பவர் ஆடு மாடு வாங்குவதற்கு வங்கியில் லோன் எடுக்க கிராம நிர்வாக அலுவலர் ராமரத்தினத்தை கடந்த 2008ல் சந்தித்துள்ளார். அப்போது விஏஓ ராமரத்தினம் பட்டா சிட்டா அடங்கல் வழங்க ரூ.1500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் இன்று ராமரத்தினத்திற்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருச்சி ஊழல் தடுப்பு நீதிபதி புவியரசு தீர்ப்பு அளித்துள்ளார்.

News October 31, 2025

திருச்சி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 31, 2025

திருச்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர், பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை அளித்து இன்று (அக்.31) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!