News October 31, 2025
பெரம்பலூர்: இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.10.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் இளைஞர்கள், தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையினை காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
பெரம்பலூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 31, 2025
பெரம்பலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News October 31, 2025
பெரம்பலூர்: சட்டப்பணிகள் குறித்து கண்காட்சி

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், செயல்பாடுகள், சேவைகள் மற்றும் சாதனைகள் குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய பத்மநாபன் தலைமையில் மாபெரும் புகைப்படக் கண்காட்சியை
ரிப்பன் வெட்டி  துவக்கி வைத்து, அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் பார்வையிட்டார்.


