News October 31, 2025

குனியமுத்தூரில் ரசம் சாப்பிட்ட தொழிலாளி பலி!

image

கோவை: குனியமுத்தூர், பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (52), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ஆம் தேதி மது போதையில் இருந்தபோது, வீட்டில் ரசம் சமைத்துள்ளார். அப்போது, ரசப் பொடிக்கு பதிலாக தவறுதலாக சாணி பவுடரை (விஷம்) ரசத்தில் கலந்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து கோவை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை!

Similar News

News October 31, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (31.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க அழைப்பு!

image

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவை மாநகர குற்ற பிரிவில் ‘செட் இ பேமெண்ட்’ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரமாக உள்ள ஆவணங்களுடன் கோவை மாநகர குற்றப்பிரிவு-1ல் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 31, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.01) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, சுங்கம் பைப்பாஸ், ஸ்டேட் பேங்க் ரோடு, ஆட்சியர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!