News October 31, 2025

ராணிப்பேட்டை: மழையால் இடிந்த வீடு!

image

சோளிங்கர் வட்டம் வெங்குபட்டு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (அக்.28) சேகர் தனது குடும்பத்தினருடன் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தொடர் மழை காரணமாக பூஜை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அறையில் இருந்த பொருட்கள் மற்றும் டி.வி. சேதமானது. அதிர்ஷ்டவசமாக குடும்ப உறுப்பினர்கள் உயிர் தப்பினார்கள்.

Similar News

News October 31, 2025

ராணிப்பேட்டை: போதை மாத்திரைகள் பதுக்கிய 2 பேர் கைது

image

வாலாஜா பகுதியில் தருண் என்பவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு இன்று (அக்.31) தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ற காவலர் சாலமன், அவர்களிடம் இருந்து 800 போதை மாத்திரைகளை கைப்பற்றினார். மேலும், இந்த மாத்திரைகள் புனேவில் இருந்து கொரியர் மூலம் வரவைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News October 31, 2025

ராணிப்பேட்டை: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

image

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து 15.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

ராணிப்பேட்டை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!