News October 31, 2025

திருச்சி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

image

திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை அருகே கடந்த 20-ம் தேதி இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது மதுரை – திருச்சி ரயில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் நேற்று (அக்.30) உயிரிழந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 31, 2025

திருச்சி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 31, 2025

திருச்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர், பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை அளித்து இன்று (அக்.31) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

திருச்சி: நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு

image

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நபார்டு வங்கி நிதி சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆபிஸர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://nabfins.org/ என்ற இணையதளம் மூலம் வரும் நவ.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!