News October 31, 2025
ஆப்கனுக்கு இந்தியா முழு ஆதரவு

பாக்., – ஆப்கன் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே ஆப்கனுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கனின் இறையாண்மை, சுதந்திரம் & ஒருமைப்பாட்டுக்கு முழுமையாக ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்., தூண்டி விடுவதை இந்தியா உள்பட எந்த அண்டை நாடுகளும் ஏற்காது என்றும் கூறியுள்ளது.
Similar News
News October 31, 2025
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளித்த ஜாய் கிரிசில்டாவிற்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மாதம் ₹6.50 லட்சம் பராமரிப்பு தொகை கேட்டு ஜாய் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. ரங்கராஜுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
INDIA – USA: 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.
News October 31, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.


