News October 31, 2025
புதுச்சேரி: வாலிபருக்கு சரமாரி வெட்டு

புதுச்சேரி நாவர்குலம் களைவாணர் நகர் பகுதியில் வாலிபர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல், தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் மிகவும் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை வெறி தாக்குதலுக்கான காரணத்தை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
Similar News
News October 31, 2025
தேசிய ஒற்றுமை தினம் -புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நம் தேசத்தின் ஒற்றுமைக்கான சின்னமாக விளங்கிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளில் அவரின் மகத்தான தியாத்தையும் உறுதியான தலைமைத்துவத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் ஒற்றுமை தான் நம் வலிமை ஒற்றுமை தான் நம் அடையாளம் என்று அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
புதுவை: இது தெரிஞ்சா சிரமப்பட வேண்டாம்!

புதுவை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News October 31, 2025
புதுச்சேரியில் கால்நடை துறை அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி அரசின் இணை செயலாளர் பத்மநாபன் சுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், “கால்நடை அபிவிருத்தி பிரிவு இணை இயக்குநர் செந்தில்குமார் கால்நடை மருத்துவ கல்லுாரி நிர்வாக துணை பதிவாளராக நியமித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோழி அபிவிருந்தி பிரிவு இணை இயக்குநர் குமாரவேல், கால்நடை உற்பத்தி பிரிவு இணை இயக்குநராகவும், இடமாற்றம் செய்யப்பட்டார்.” என தெரிவிக்கப்பட்டுய்ள்ளது.


