News October 31, 2025
தென்காசி: வீடுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கல் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் 3.11.2025 மற்றும் 4.11.2025 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
தென்காசி: பள்ளி மாணவி தற்கொலை

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பவி இன்ஷா (14). இவர் நேற்று காலை, தனக்கு காது வலிப்பதாக தாயிடம் கூறினாராம். அதற்கு தாய் மருந்து போட்டு பள்ளிக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News October 31, 2025
குற்றாலத்தில் கடைகள் ஏலம் அறிவிப்பு

குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேரருவிப் பகுதியில் சந்தனம் குங்குமம் தற்காலிக கடை அமைத்திட நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 முடிய உள்ள கால அளவிற்கு அனுபவித்து கொள்ளும் பொருட்டு நிபந்தனைகளுக்குட்பட்டு குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 07-ம் தேதி (07.11.2025) வெள்ளிக்கிழமை ஏலம் நடத்தப்படும்.
News October 31, 2025
தென்காசி: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


