News October 31, 2025

திருவள்ளூர்: மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (நவ.05) அன்று காலை 10.30 மணிக்கு துவக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

திருவள்ளூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

திருவள்ளூர்: லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., கைது

image

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆபரேட்டர் சுகுமார் ஆகியோர் வாகனத்தை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர். தாராட்சி பகுதியைச் சேர்ந்த அஜித் குமாரிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் நடந்த சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

News October 31, 2025

திருவள்ளூர்: மனித மிருகத்திற்கு சிறை..!

image

திருவள்ளூர் மாவட்டம் நயப்பாக்கம் சேர்ந்த யுவராஜ்29 கடந்த 2018-ல் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் யுவராஜை புழல் சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சாட்சியங்களின் குற்றம் நிரூபணமாகி குற்றவாளிக்கு 23 ஆண்டுகள் சிறை ரூ.21,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!