News October 31, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
தஞ்சை: அரசு ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி அடுத்த விண்ணனூர்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த நிதிஷ் (22) என்பவர் தனது நண்பர்களுடன் காயத்திற்கு சிகிச்சை அளிக்க நேற்று திருக்காட்டுப்பள்ளி GHக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் நவீன், சூர்யா அகியோரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.
News October 31, 2025
தஞ்சை: ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம்

ஒரத்தநாட்டை அடுத்த தெற்குகோட்டை ராஜாமடம் கிளை ஆற்றில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பாப்பாநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆற்றில் சடலமாக மிதந்து வந்த நபர் யார்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 31, 2025
தஞ்சை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


