News October 31, 2025

அதிக தங்க நகை அணிந்தால் ₹50,000 அபராதம்!

image

அதிக தங்க நகை அணிவதை நம்மூரில் கௌரவமாக பார்ப்பார்கள். அதிக மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆனால், நகை இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள் என்று யோசித்துள்ளது ஹரியானாவில் உள்ள காந்தார் கிராமம். அதனால், அதிக தங்க நகை அணிந்தால் அங்கு ₹50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. சுப தினத்தில் கூட கம்மல், மூக்குத்தி, தாலி மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதற்கு பெண்கள் ஒத்துக்கொண்டது தான் ஆச்சரியம்.

Similar News

News October 31, 2025

BREAKING: தங்கம் விலை.. மகிழ்ச்சி செய்தி

image

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் என மாறிக்கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,949-லிருந்து $4,018.9-ஆக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களுக்கு பிறகு விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ₹11,300-க்கும், சவரன் 90,400-க்கும் விற்பனையாகிறது.

News October 31, 2025

அன்புமணி மீது பாய்கிறதா வழக்கு?

image

நேபாளத்தில் ஊழல் ஆட்சியை அகற்ற GEN Z தலைமுறையினர் செய்த புரட்சியை போல, தமிழகத்திலும் இளைஞர்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். முன்னதாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து நேபாளத்தில் நடந்த புரட்சி தமிழகத்திலும் நடக்கவேண்டும் என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தார். இதற்காக, வன்முறையை தூண்டுகிறார் என அவர் மீது வழக்கு பாய்ந்தது. இந்நிலையில், அன்புமணி மீதும் வழக்கு பாயுமா?

News October 31, 2025

திமுகவில் இணைந்தனர்…

image

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. 2011, 2016, 2021 என தொடர்ந்து இத்தொகுதியில் EPS-ன் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வெற்றி பெற்று வருகிறார். இதனால், இந்த தொகுதியை கைப்பற்றும் பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் திமுக ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!