News October 30, 2025
உச்சத்தை தொட்ட காற்று மாசு: புகைமூட்டமான டெல்லி!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதிலும் இன்று காற்று தரக்குறியீடு 375 ஆக உயர்ந்து, சிவப்பு மண்டலத்தை எட்டியுள்ளது. விவேக் விஹார், ஆனந்த் விஹார், அசோக் விஹார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் AQI 400-ஐ தாண்டி, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தலைநகர் முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கும் நிலையில், இது ஆபத்தான சூழல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Similar News
News October 31, 2025
கிருஷ்ண துளசி vs ராம துளசி! வீட்டில் எது இருக்கணும்?

ராம துளசி பச்சை நிறத்திலும், கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. ராம துளசி மிகவும் லேசான நறுமணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிருஷ்ண துளசி மிகவும் வலுவான நறுமணத்தை கொண்டுள்ளது. வீட்டின் வடகிழக்கு திசையில், கிருஷ்ண துளசியை நடுவது வீட்டின் நிதி நிலைமையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News October 31, 2025
சுபமுகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினமான இன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பதிவு செய்ய விரும்புவோர் இந்த நன்னாளில் முந்துங்கள்.
News October 31, 2025
மலைப்பாம்புடன் பிரியங்கா சோப்ரா PHOTOS

லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா, தனது போட்டோஷூட்களால் ரசிகர்களை இணைப்பிலேயே வைத்துள்ளார். அந்த வகையில், மலைப்பாம்பை கழுத்தில் போட்டபடி, புன்னகையான முகத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ‘நீங்க தைரியமான பொன்னு தான் அப்டின்னு ஒத்துக்குறோம் பிரியங்கா’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். உங்களுக்கு பிரியங்காவிடம் பிடித்தது என்ன?


