News October 30, 2025

சென்னை: ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம்

image

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் துணை மேயர் மகேஷ் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News October 31, 2025

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (அக்.31) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8th, SSLC, +2, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

கிராண்ட் மாஸ்டர் ஆன 16 வயது சிறுவன்

image

சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் இளம்பரிதி செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதித்துள்ளார். இதன்மூலம் அவர் தமிழ்நாட்டில் 35 வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், இந்தியாவின் 90 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். செஸ் வீராங்கனை மற்றும் தேசிய விளையாட்டு அணியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இதற்கு முந்தய 11 ஆட்டத்தில் 9.5 புள்ளிகள் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 31, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (30.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!