News October 30, 2025
நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நாளை(அக்.31) தொடங்குகிறது. தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 2 நாள்கள் அரசு சார்பில் இவ்விழா நடைபெறவுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி நாளை மறுதினம்(நவ.1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 31, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 31, 2025
பிஹார் மக்களை திமுக துன்புறுத்துகிறது: PM மோடி

தமிழகத்தில் பிஹார் மக்களை திமுக துன்புறுத்துவதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், கர்நாடகா, தெலுங்கான ஆகிய காங்., ஆளும் மாநிலங்களிலும் பிஹார் மக்கள் அச்சுறுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, ஒடிசா சட்டமன்ற தேர்தலின் போது, புரி ஜெகநாதர் கோயிலின் சாவி தமிழகத்திற்கு சென்றுவிட்டதாக மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.
News October 31, 2025
Sports 360°: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்

*ஆசிய யூத் கேம்ஸ் மகளிர் குத்துச்சண்டை, 46 கிலோ எடை பிரிவில் குஷி சந்த், 50 கிலோ எடை பிரிவில் அஹானா சர்மா, 54 கிலோ எடை பிரிவில் சந்திரிகா பூஜாரி தங்கப் பதக்கம் வென்றனர். *ஹைலோ ஓபன் பேட்மிண்டனில் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறினார். *பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் பக்தி சர்மா வெள்ளி வென்றார். *கனடா ஓபன் ஸ்குவாஷில், அனாஹத் சிங் அரையிறுதியில் தோல்வி.


