News October 30, 2025
சிவகங்கை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இசேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க
Similar News
News October 31, 2025
சிவகங்கை ரயில் பயணிகள் கவனத்திற்கு…

சிவகங்கை ரயில் எண்-16321/16322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் விரைவு ரயில் மதுரையில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக நவம்பர் 1, 6, 8,11, 13, 15 ஆகிய தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய வழித்தட நிறுத்தங்களுடன் திருப்பி விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் தங்கள் பயணத்தை இந்த அட்டவணைக்கு தகுந்தபடி அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
News October 31, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீஸ் விவரம் இதோ

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (30.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்புத்துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை அழைக்கலாம். 100ஐ டயல் செய்தும் பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்புதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (30.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


