News October 30, 2025

சென்னை: வீட்டில் தீ விபத்து!

image

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மருத்துவர் ஆனந்த் பிரதீப் வசித்து வருகிறார். அதிகாலை 4 மணியளவில் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவர் ஆனந்த் பிரதீப்பின் மனைவி ஷாஜி பாலா (58) பரிதாபமாக உயிரிழந்தார். மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது சிலிண்டர் கசிவால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் கிண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 31, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (30.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News October 30, 2025

கார்த்திகாவை நேரில் பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்

image

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் மகளிர் பிரிவில், கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா தங்கம் வென்றிருந்தார். அவரையும், அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், பாராட்டும் வகையில் இயக்குநர் பைசன் படக்குழு சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக மொத்தம் 10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் மாரிசெல்வராஜ் இன்று கார்த்திகாவிடம் வழங்கினார்.

News October 30, 2025

சென்னை: ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம்

image

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் துணை மேயர் மகேஷ் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!