News October 30, 2025
கோவை: சொந்த வீடு வேணுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News October 31, 2025
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் தீவிர கண்காணிப்பு!

அதிவேக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த, கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் திரையுடன் 8 இடங்களில் ஏஐ கேமரா பொருத்தப்பட உள்ளது. விதிமீறல் வாகன எண்கள் திரையில் காணப்படும். வேகம், ஹெல்மெட், சீட் பெல்ட் மீறல்கள் தன்னிச்சையாக பதிவு செய்யப்படும் தற்போது இவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார். மேலும்மேம்பாலத்தில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறை
News October 31, 2025
கோவை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
குனியமுத்தூரில் ரசம் சாப்பிட்ட தொழிலாளி பலி!

கோவை: குனியமுத்தூர், பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (52), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ஆம் தேதி மது போதையில் இருந்தபோது, வீட்டில் ரசம் சமைத்துள்ளார். அப்போது, ரசப் பொடிக்கு பதிலாக தவறுதலாக சாணி பவுடரை (விஷம்) ரசத்தில் கலந்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து கோவை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை!


