News October 30, 2025
ராணிப்பேட்டை: துணை முதலமைச்சர் வருகையில் மாற்றம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில், பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் அக்.31 அன்று நடைபெறவிருந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில நிர்வாக காரணத்திற்காக மாற்றம் செய்து 03.11.2025 (திங்கட்கிழமை) அன்று மேற்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
ஆற்காடு:மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

இன்று (அக் -30) ஆற்காடு அடுத்த களர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் தன் நிலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு காவல்துறையினர் சீனிவாசன் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 30, 2025
ராணிப்பேட்டை: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (அக்.30) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் போதை மாத்திரைகள், ஊசிகள், போதை சிகரெட்டுகள் விற்பனை செய்யாதீர்கள். உங்களிடம் யாராவது வந்து கேட்டால் எங்களிடம் இல்லை என்று சொல்லுங்கள். போதை மருந்துகள் உங்கள் பணத்தை மட்டுமில்லை உங்கள் வாழ்க்கையும் சீரழிக்கும் என்று அறிவுறுத்தியுள்ளது.
News October 30, 2025
ராணிப்பேட்டை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


