News October 30, 2025
BREAKING: பதவியை ராஜினாமா செய்கிறாரா கே.என்.நேரு?

நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் மோசடி நடந்துள்ளதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக புயலை கிளப்பியுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, பொன்முடியை போலவே கே.என்.நேருவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், கே.என்.நேரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.
Similar News
News October 30, 2025
ரிஷப் பண்ட்டுக்கு எதிராக களமிறங்கிய கோலி ரசிகர்கள்

சமீபத்தில் நடந்த ENG-க்கு எதிரான டெஸ்ட்டின் போது ரிஷப் பண்ட்டுக்கு காலில் அடிபட்டது. 3 மாத சிகிச்சைக்கு பிறகு, தென்னாப்பிரிக்க A அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், இன்று அவர் களமிறங்கினார். ஆனால், கோலியின் 18-ம் நம்பர் ஜெர்ஸியுடன் களமிறங்கியது பேசுபொருளாகியுள்ளது. ஜெர்ஸி என்பது வீரரின் அடையாளம் எனவும், சச்சின், தோனியை போன்று கோலியின் ஜெர்ஸிக்கும் ஓய்வளிக்க ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
News October 30, 2025
FLASH: விஜய்யுடன் கூட்டணியா? முடிவை அறிவித்த EPS

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என EPS தனது முடிவை அறிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், நாமக்கல்லில் தனது பரப்புரையில், தவெகவினர் சிலர் தங்களது கட்சிக் கொடியை காட்டி ஆரவாரத்துடன் கூச்சலிட்டதால், அது கூட்டணிக்கான பிள்ளையார்சுழி என தான் கூறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என சூசகமாக பதில் அளித்தார்.
News October 30, 2025
சாலையில் குப்பை போட்டால்.. வீட்டு வாசலில் குப்பை வரும்!

பெங்களூரு நகரின் சாலைகளில் குப்பை போட்டால், இனி குப்பை வீட்டு வாசலுக்கு வரும்! ஆம், நகராட்சியினர் ‘You dump it, you get it’ என்ற பெயரில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். அதாவது, எச்சரிக்கைகளை மீறி, சாலைகளில் குப்பையை வீசி செல்பவர்களின் வீட்டின் முன், குப்பையை கொட்டுகின்றனர். மேலும், அவர்களுக்கு ₹2,000 முதல் ₹10,000 வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இப்படி செய்வது சரியான செயல் என நினைக்கிறீங்களா?


