News October 30, 2025
மதுரை: மர்ம நோயால் கல்லூரி மாணவர் தற்கொலை

திருநகரை சேர்ந்தவர் ரங்கராஜன் மகன் விக்னேஷ்(19). இவர் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு விபரீத நோய் ஏற்பட, அது நாளடைவில் வெண்குஷ்டம் போன்று மாறிவிட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்தவர், நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 30, 2025
மதுரை மக்களே இதை நம்பாதீங்க – மாநகர காவல்துறை

மதுரை மாநகர் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. குறைந்த வட்டியில் லோன் அல்லது தனிநபர் கடன் வழங்குவோம் என கூறி இணையத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். கடன் தேவையுள்ளவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று மட்டுமே கடன் பெற வேண்டும். மோசடிக்கு ஆளானால் மதுரை சைபர் கிரைம்: 0452-2340029 (அ) 1930 என்ற எண்ணில் புகார் செய்யலாம். SHARE!
News October 30, 2025
மதுரை: PHONE தொலைந்து விட்டால் நோ டென்ஷன்!

மதுரை மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News October 30, 2025
மதுரை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


