News October 30, 2025
கடலூர்: வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

சிதம்பரம் அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவரது நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாசின் (20) என்பவர் பழுது நீக்கி கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 30, 2025
கடலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

கடலூர் மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News October 30, 2025
கடலூரில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,31) “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமராட்சி வட்டம், உசுப்பூர் அடுத்த விபூஷ்ணபுரம், ஹரி மகால், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட மலைமேடு, அரசினர் மேல்நிலைப்பள்ளி, நல்லூர் வட்டம், எறையூர், சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
கடலூர் மக்களே இனி அலைய வேண்டியதில்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அட்டை: voters.eci.gov.in, 3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4. பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க. அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


