News October 30, 2025

சென்னை: பெண் தோழியிடம் பேசியவர் வெட்டிக் கொலை

image

புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ், அசோக் நகர் காவல் நிலையம் அருகே தனது தோழியுடன் நேற்று காரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 30, 2025

சென்னையில் ரூ.5,000 அபராதம்!

image

சென்னை மாநகராட்சியில் நாய்கள் & பூனை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், உரிமம் பெறாமல் இருப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், நாய்கள் வெளியில் செல்லும் போது கழுத்து பட்டை இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது நவம்பர் 24 தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

News October 30, 2025

சென்னை: வீட்டில் தீ விபத்து!

image

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மருத்துவர் ஆனந்த் பிரதீப் வசித்து வருகிறார். அதிகாலை 4 மணியளவில் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவர் ஆனந்த் பிரதீப்பின் மனைவி ஷாஜி பாலா (58) பரிதாபமாக உயிரிழந்தார். மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது சிலிண்டர் கசிவால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் கிண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News October 30, 2025

சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!