News October 30, 2025
கரூரில் தவெகவினர் தாக்கப்பட்டனர்: CTR

கரூர் துயரம் நடந்த முதல் நாளே தானும், N.ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கரூருக்கு வெளியே காத்திருந்ததாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸார் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், தவெக கொடி கட்டிய வாகனங்களுக்கு ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறினார். அத்துடன், அனைத்து தவெக நிர்வாகிகளும் தாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
சற்றுமுன்: புதன்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

₹50,000 வரை பரிசுகளை வெல்லும், மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவ குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE
News November 1, 2025
தென் தமிழகத்தில் மோசமான தோல்வியை EPS சந்திப்பார்: TTV

EPS-ன் பதவி வெறியால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் செங்கோட்டையனை விட மூத்த நிர்வாகி ஒருவரும் கிடையாது எனவும், 2021-ஐ விட 2026 தேர்தலில், தென் தமிழகத்தில் மிக மோசமான தோல்வியை EPS சந்திப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், EPS-ஐ பதவியில் அமர வைத்த நாங்கள் துரோகியா, அவர் துரோகியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 1, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000 கிடைக்குமா? வந்தது அப்டேட்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த உணவு பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள், இந்த தகவல் வெறும் வதந்தியே எனத் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசித்து CM ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


