News October 30, 2025
முதலியார் பேட்டை: போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை முதலியார் பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மதுபான கடை அருகே ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் ரகளை செய்ததை கண்டு அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முதலியார் பேட்டை சேர்ந்த மேகி (31) என்று தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News November 1, 2025
புதுவை: மருத்துவ படிப்பில் கூடுதலாக இடங்கள்

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்க 56 இடங்கள் உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதனை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிடம் புதுவை அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி இந்த ஆண்டு கூடுதலாக 16 இடங்களை நிரப்ப மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது. இதனால் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை இடங்கள் 72 ஆக உயர்ந்துள்ளது.
News November 1, 2025
புதுவை: விடுதலைநாள் விழா – தேசிய கொடி ஏற்றிய முதல்வர்

புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று (நவ.1) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார். இவ்விழாவில் சபாநாயகர், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 1, 2025
புதுவை: வாய்க்காலில் விழுந்து விவசாயி பலி

புதுவை, பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்திக்கு நுரையீரலில் பிரச்சினை இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவர் அங்குள்ள வாய்க்காலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


