News April 18, 2024
வாக்காளருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க முடியுமா?

வாக்காளருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க முடியுமா எனத் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டை ஒப்பிட்டுப் பார்க்கக்கோரித் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஆணையம், அது மிகப்பெரும் ஆபத்து, யாருக்கு வாக்களித்தோம் என்பது விவிபேட் திரையில் 7 வினாடிகள் தெரியும் என்றது.
Similar News
News February 18, 2026
போலி பென்ஷன் அட்டை.. நம்பாதீங்க

போலியான பென்ஷன் அட்டைகள் இணையத்தில் பரவுவதாகவும் அதை நம்ப வேண்டாம் என்றும் பரோடா வங்கி அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஓய்வூதிய அட்டைகள் தொடர்பாக போன் கால் மூலம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட விவரங்களை கேட்டால் பகிர வேண்டாம் என்றும், வாட்ஸ்ஆப் / SMS மூலம் வரும் Link-களை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.
News February 18, 2026
MGR உத்தரவை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: சேரன்

சிறு படங்களை காப்பாற்ற, MGR-ன் உத்தரவை TN அரசு பின்பற்ற வேண்டும் என சேரன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் பேசிய அவர், MGR CM-ஆக இருந்தபோது, டப்பிங் படங்களால் தமிழ் சினிமா அழியும் நிலை இருந்தது. உடனே MGR, எல்லா தியேட்டர்களும் ஆண்டுக்கு 90 நாள்கள் தமிழ் படங்களைத்தான் திரையிட வேண்டும்; இல்லை என்றால், லைசன்ஸ் ரத்து என்று அறிவித்தார். இதனை TN அரசு பின்பற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News February 18, 2026
அம்மா SORRY.. நான் சாகப் போறேன்

தற்கொலை செய்து கொண்ட சேலத்தை சேர்ந்த சண்முகபிரியாவின்(22) கடைசி எழுத்துக்கள் இவை. கெளதம் என்பவரை காதலித்த, சண்முகபிரியா, அவரின் நடத்தை சரியில்லாததாக கூறி, பிரேக் அப் செய்துள்ளார். ஆத்திரமடைந்த கௌதம் திருமணம் செய்யாவிட்டால் Private போட்டோக்களை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான சண்முகபிரியா, ‘அவன வாழ விடாதீங்க’ என எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


